2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லூர் உற்சவ காலத்தில் 121 பேர் குருதி வழங்கினர்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன் 

நல்லூர் உற்சவகாலத்தில் 121 குருதிக் கொடையாளர்கள் குருதி வழங்கியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அறிவித்துள்ளது.

நல்லூர் உற்சவகால இரத்ததான முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று தீர்த்தத் திருவிழா ஆகிய 25ஆவது தினம் வரையில் 121 குருதிக் கொடையாளிகள் குருதி வழங்கியுள்ளதாகவும், இவ் இரத்ததான முகாம் நாளை வரையிலும் நடைபெறும் என இரத்த வங்கி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவகாலத்தில் சராசரியாக 125 குருதிக் கொடையாளர்கள் குருதி வழங்கி வருவதாக இரத்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .