2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இளைஞருக்கு 2 வருட கடூழிய சிறை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

16 வயதுப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இளைஞருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டணை யாழ். மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

2006 மே மாதம் 27ஆம் திகதி நயினாதீவு பகுதியைச் சேர்ந்த யுவதியை நயினாதீவு 5ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த ரட்ணசிங்கம் ரஜீவ் என்பவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கெதிரான வழக்கினை யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் 2 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் 5 வருடத்திற்கு வழக்கினை ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .