2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில். சிறுகுற்றம் புரிந்த 90 பேர் கைது: பிரதி பொலிஸ் மா அதிபர்

Kanagaraj   / 2013 ஜனவரி 26 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 90 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா நேற்று தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும்,  சட்ட விரோத மதுபான விற்பனை 4 பேரும்,  கஞ்சா விற்பனை செய்த 17 பேரும்,  மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 11 பேரும், பொது இடங்களில் மது அருந்திய 14 பேரும், சட்ட விரோதமான முறையில் வீட்டி ஆமை வைத்திருந்த 10 பேர், சுற்றுச் சூழல் மாசடையும் விதத்தில் குப்பை கூழங்களை போட்டவர்கள் 10 பேரும் உட்பட 15 வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 2 பேரும் உட்பட 90 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .