2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகள் 108பேர் நாளை விடுதலை

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

முன்னாள் போராளிகள் 108பேர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்தோடு அவர்களை இணைக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலைக்கான அடிக்கல் திரைநீக்கம் செய்யப்பட்ட பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவர்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் மீண்டும் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • jeeva Sunday, 11 December 2011 01:30 AM

    நம்பிக்கை பிழைத்தல், மீண்டும் போராட்டமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .