2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் காசநோயினால் 170 பேர் பாதிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் காசநோயினால் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 10 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் யாழ். மாவட்ட காசநோய் வைத்திய நிபுணர் எஸ். யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 2013 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான இக்காலப்பகுதியில் சளி பரிசோதனையின் மூலம் 170 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் 10 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக சாதாரண இருமல் சளியுடன் காணப்பட்டால், வைத்தியசாலைகளில் சளி பரிசோதனை மேற்கொண்டு, காசநோயினை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ சிகிச்சையினை மேற்கொள்ளுமாறும் அவர் கூறினார்.

அதேவேளை, வேலைத்தளங்கள் மற்றும் போக்குவரத்து நேரங்களில், புகையினை தவிர்த்துக் கொள்ளுமாறும், காற்றோட்டம் மிக்க சுவாசத்திற்கு ஏற்றவாறு வேலைத்தளங்கள் மற்றும் வீடுகளை அமைத்துக் கொள்ளுமாறும் காசநோய் வைத்திய நிபுணர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .