2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 25 பேரும் விடுதலை

Super User   / 2013 ஜூலை 03 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 25 பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. யாழ். நெடுந்தீவு கடற் பரப்பில் கடந்த மே 6ஆம் திகதி  புதன்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கு கடந்த மாதம் 19ஆம் திகதி யாழ். மேல் நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் 25 மீனவர்களையும் யூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எஸ். மகேந்திரராஜா 25 மீனவர்களையும் விடுதலை செய்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .