2025 ஜூன் 18, புதன்கிழமை

திருவையாறு பிரசேத்தில் 3 மின் மாற்றிகள் திறப்பு

Super User   / 2013 ஜனவரி 30 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி திருவையாறு பிரசேத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மின் மாற்றிகள் இன்று திற்துவைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட உழவு இயந்திர சங்க செயலாளர் சந்திரதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கலந்துகொண்டு மின் மாற்றிகளை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய நிகழ்வில் 3.3 கிலோ மீற்றர் தூரத்திற்கு உயரழுத்த மின்சாரம் மற்றும் 14.6 கிலோமீற்றர் தூரத்திற்கு தாழுத்த மின்சாரம் உள்ளடங்களாக மூன்று மின் மாற்றிகள் திறந்தவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .