2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்கால் பகுதியில் 6 தற்கொலை அங்கிகள் மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)
முல்லைத்தீவு, வெள்ளா முள்ளிவாய்கால் பகுதியில் தற்கொலை அங்கிகள் 6 விசேட புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தர்.

விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வெள்ளா முள்ளிவாய்கால் பகுதியில் கடந்த 26ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலின்போது இத் தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளில், 8 கிலோ கிராம் நிறையுடைய தற்கொலை அங்கி ஒன்று, 4 கிலோ நிறையுடைய தற்கொலை அங்கிகள் மூன்று, 3 கிலோ கிராம் நிறையுடைய தற்கொலை அங்கி ஒன்று, 1 கிலோ கிராம் நிறையுடைய தற்கொலை அங்கி ஒன்றுமாக மொத்தம் 6 அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆர்.பி.ஜி 1, வோக்கிடோக்கி 1, ரி 56 ரக துப்பாக்கி ஒன்று என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .