2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கிணற்றில் வீழ்ந்து 1 வயது குழந்தை மரணம்

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

கிணற்றில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் தாவடியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தாவடியைச் சோந்த ஸ்ரீஸ்கந்தராசா கேசினா என்ற 1 குழந்தையே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளது.

குழந்தையின் தாயார், குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு தோட்ட வேலைக்குச் சென்றதாகவும் இதன்போதே குழந்தை கிணற்றில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டும் இந்த பெற்றோர்களின் 4 வயது ஆண் பிள்ளையொன்றும் இதேபோன்று கிணற்றில் தவறிவீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .