2025 மே 19, திங்கட்கிழமை

13 றோலர் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி அனுமதி அட்டை பூநகரி கடற் படையினரால் பறிமுதல்

Super User   / 2012 ஜூன் 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். குடா கடலில் ஆழ்கடல் மீன் பிடிக்க சென்ற 13 றோலர் கடற்றொழிலாளர்களுடைய மீன்பிடி அனுமதி அட்டை பூநகரி கடற் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என யாழ். குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி  சங்கத் தலைவர் எஸ். பிறோமன் தெரிவித்தார்

குறித்த 13 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் றோலரில் சென்று குடா கடல் பூநகரி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு சிறு தொழிலாளிகளின் தொழில் வளங்களை அழித்துள்ளது. இதனாலேயே கடற்படை 13 தொழிலாளர்களது மீன்பிடி அனுமதி அட்டையினை பறித்துள்ளது என குறிப்பிட்டுள்ளானர்.

கடற்றொழிலாளர்களது மீன்பிடி அனுமதி அட்டையினை கடற்றொழிலாளர்களிடமிருந்து பெற்று மீண்டும் தாங்கள் தொழில் செய்ய அனுமதிக்குமாறு கடற்றொழிலாளர்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X