Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் 14 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 7 பேர் யாழ்.மாநகர சபை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நேற்று முன்தினம் அரியாலையைச் சேர்ந்த 18 வயது மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் டெங்குநோய் தீவிரமாக பரவக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, யாழ்.மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
3 hours ago