2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மழையால் 14 மீன்பிடிப் படகுகள் சேதம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்றைத் தொடர்ந்து மீனவர்களின் 14 படகுகள் சேதமடைந்துள்ளதாக நீரியல்வளத்துறை மற்றும் கடற்றொழிலாளர் திணைக்களத்தின் யாழ். அலுவலக உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. நெடுந்தீவில் 8 படகுகளும் நாகர் கோவிலில் 4 படகுகளும் இன்பசிட்டிக் கரையோரத்தில் 2 படகுகளும் சேதமடைந்துள்ளன. படகுகள்  சேதமடைந்தமையால் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தும்பளை மற்றும் குடத்தனை பகுதிகளிலுள்ள மீனவர்களின் வீடுகளினுள் வெள்ளநீர் புகுந்துள்ளன. இவர்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவதாகவும் நீரியல்வளத்துறை மற்றும் கடற்றொழிலாளர் திணைக்களத்தின் யாழ். அலுவலக உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .