2025 ஜூன் 21, சனிக்கிழமை

செப்டெம்பர் 15 இல் ஜனாதிபதி யாழ். விஜயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும், சுற்றாடல் துறை அமைச்சாருமான சுசில் பிரேமஜயந்த இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பிரச்சார அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"எதிர்வரும் 15ம் திகதி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நிலையில், சுன்னாகம் மின்சார நிலையத்தில் லக்ஷபானா மின் இணைப்பினையும் சாவக்சேரி பகுதியில் பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்" என அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .