2025 மே 17, சனிக்கிழமை

அல்லைப்பிட்டியில் வெள்ளம்; 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அல்லைப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து கோவிலொன்றில்  தங்கியுள்ளதாக வேலணை பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.சிவராஜா தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை  வேலணை பிரதேசசபைத் தவிசாளர் வழங்கி வருகின்றார்.

அப்பகுதி மக்கள் வெள்ளநீரை தண்ணீர்ப்பம்பிகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இந்த வெள்ளநீர் காரணமாக தமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .