2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வேம்படி மகளிர் கல்லூரியின் 175 ஆண்டு விழா நிகழ்வுகள்

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பாகி 29 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் முதல்வர் வேணுகா சண்முகரத்தினம் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.டபிள்யு.விமலராஜா கலந்துகொண்டார்.

175 ஆண்டு நிறைவினை வெளிப்படுத்தும் விதமாக பலூன்கள் பறக்கவிடப்பட்டு இன்றைய  நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்றைய முதல் நாள் நிகழ்வில், 175 ஆண்டு நிறைவினையொட்டி, யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட வலைப்பந்தாட்டம், மற்றும் கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றின் இறுதிப்போட்டிகள்  நடைபெற்றன.

தொடந்து கல்லூரி மாணவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சியும் இடம்பெற்றது. கண்காட்சியில் பேய் வீடு, காடு ஒன்றின் கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அம்சங்கள் காணப்பட்டன.

அத்துடன் வடமாகாண உடற்பயிற்சி போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கல்லூரியின் உடற்பயிற்சி அணியின் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்வும் நடைபெற்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .