2025 ஜூன் 21, சனிக்கிழமை

'யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக யாழில் 1,778 வீடுகளை படையினர் நிர்மாணித்துள்ளனர்'

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 29 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக யாழ். மாவட்டத்தில் 1,778 வீடுகள் பாதுகாப்பு படையினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

அச்சுவேலி பகுதியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிவழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில

'யாழ். மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நல்ல ஒற்றுமை நிலவுகின்றது. அத்துடன், யாழ். மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் யாழில் நிலைகொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் குறைவாக இருந்தாலும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக செயற்பட்டு வருகின்றார்கள்.

கூடுதலான அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் கொழும்பில் தான் இருக்கின்றார்கள். யாராவது யாழ். மாவட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்களா? ஆனாலும், பாதுகாப்பு படையினர் குறைவாக இருந்தாலும் தமது நடவடிக்கைகளையும், பொது மக்களுக்கு உதவும் பங்களிப்பினையும் திருப்தியாக செய்து வருகின்றார்கள்.

யாழ். மாவட்டத்தில் வறுமைப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு படையினரால் 1776 வீடுகள் யுத்த காலத்தின் பின்னரான 3 வருட காலத்தில் நிர்மாணித்துக் கொடுக்கபட்டுள்ளன. அத்துடன், இன்று திறந்து வைக்கப்படவுள்ள இரு வீடுகளுடன் 1778 வீடுகள் நிர்மாணி;த்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
 
எவ்வளவு பாதுகாப்பு படையினர் இருக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களுடைய சக்தியும், பலமும் தான் முக்கியம், அவர்கள் எவ்வாறான சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றார்கள் என்பது தான் முக்கியம். பாதுகாப்பு படையினரின் சேவைகளை பெறுபவர்கள் நல்ல மக்களாகவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

அத்துடன், தமிழ், சிங்களம், முஸ்லீம் என்ற இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால், கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் இலங்கை இன்னும் பல முன்னேற்றத்தினை அடைய முடியும். அதற்கு மக்களின் ஒற்றுமையும், சமாதானமும் முக்கியம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .