2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

19 இந்திய மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 19 பேரை காரைநகர் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை ஜனதா பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

5 படகுகளில் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்களே நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட  19 இந்திய மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும்  ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .