2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபத்துக்களில் 21 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 மே 31 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின்போது 21 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

2012ஆம் ஆண்டு வீதி விபத்துக்களின்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆனால் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தற்போது வீதி புனரமைப்பின் பின்னர் வீதிக்கு இடப்பட்டுள்ள கார்ப்பட்டினாலும் வீதி விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த நிலையில், கார்ப்பட்  வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு பயணிக்க வேண்டும். பயணங்களின்போது அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .