2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் 231 பேர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்த ஒரு வாரகாலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பெயரில் 231 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர்; பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் எக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடகவியலாளர்களுக்கான வாராந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைவாக, யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 124 பேரும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 107 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.    

இதேவேளை,  பாடசாலை மாணவிகள் (13, 14 வயது) இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சிறுமிகள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .