2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக 24மணிநேர சுழற்சிமுறை கழிவகற்றல் திட்டம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், ரஜனி)


யாழ். மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக 24 மணிநேர சுழற்சி முறையிலான கமிவகற்றல் செயற்திட்டம் எதிர்வரும் செப்ரம்பர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் சுகாதார குழுத் தலைவர் எஸ்.விஜயக்காந் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயம் தொடர்பாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்.மாநகர சபையில் 24 வட்டாரங்கள் இருக்கின்றன. இந்த வட்டாரங்களில் கழிவகற்றல் பணிக்காக 24 சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர எல்லைப் பகுதியில் தேங்கியுள்ள திண்மக் களிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள், அரச மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் கழிவகற்றல்களுக்காக மேலதிகமாக 50 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். சந்தைகளில் கழிவுகள் தேக்கமடையாமல் இருப்பதற்காக உடனுக்குடன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றது.

அத்தோடு இந்த புதிய கழிவகற்றல் திட்டத்தின் கீழ் கழிவகற்றும் வாகனங்கள் வரும் போது பொதுமக்கள் குப்பைகளைப் போடுவதற்காக வாகன சமிஞ்சை ஒலி எழுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாநகரசபையில் கழிவு அகற்றுவதற்காக 30 வாகனங்கள் தற்சமயம் இருக்கின்றன எனவும் கொழும்பு மாநகர சபையில் கழிவகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் எதிர்காலத்தில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கழிவு அகற்றல் செயற்பாடுகள் காரணமாக மாநகர சபைக்கு மாதம் 13 இலட்சம் வருமானம் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .