2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஊரெழு கிராமத்தின் அபிவிருத்திக்கு 25ஆவது விஜயபாகு காலாட்படை உறுதி

Super User   / 2013 ஜூலை 18 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஊரெழு கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

இந்த பகுதியில் உள்ள 25ஆவது விஜயபாகு காலாட்படை இராணுவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் 25ஆவது காலாட் படை மேஜர் கே.ஏ.ஆர்.ஜயசிங்க கலந்துகொண்டார்.

இதன்போது, ஊரெழு பகுதி மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதேவேளை, ஊரெழு கிராமத்தில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கு இராணுவம் தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக 25ஆவது காலாட்படை மேஜர் கே.ஏ.ஆர்.ஜயசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி கலந்துரையாடலில், அப்பிரதேசத்தின் சமூக பிரதிநிதிகள் உட்பட  மக்கள் மற்;றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .