2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் கடலட்டைகளுடன் 10 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். குருநகர் கடற்கரையில் 2,608 கடல் அட்டைகளுடன் 10 மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த கடற்றொழில் பரிசோதகர் ரமேஸ் கண்ணா தெரிவித்தார்.

குருநகர் கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 2 படகுகளில் 10 மீனவர்கள் கடல் அட்டைகளை பிடித்துக்கொண்டு கரைக்கு வந்தபோதே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   ஒரு படகில் 1,050 கடல் அட்டைகளுடன் 5 மீனவர்களும் மற்றைய படகில் 1,558 கடல் அட்டைகளுடன்  5 மீனவர்களும் இருந்ததாகவும் அவர் கூறினார்.

கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள்,  இழுவை வலைகள், இயந்திரங்கள், கடல் அட்டைகளுடன் மீனவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.   படகுகள்,  இழுவை வலைகள், இயந்திரங்கள், கடல் அட்டைகளுடன் 10 மீனவர்களையும் யாழ். நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .