2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதி விபத்துக் காரணமாக கடந்த 3 மாதங்களில் 8 பேர் பலி; 914 பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 11 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாதங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக 8 பேர் மரணமடைந்ததுடன்,  படுகாயமடைந்த 914 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும்  யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த  2011ஆம் ஆண்டில் 37 பேர் மரணமடைந்ததுடன், படுகாயமடைந்த 1,785 பேர் சிகிச்சை பெற்றனர்.  கடந்த 2010ஆம் ஆண்டில் 22 பேர் மரணமடைந்ததுடன், படுகாயமடைந்த 1,327 பேர்  சிகிச்சை பெற்றதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கூறியுள்ளது.

கடந்த 2 வருடங்களையும் விட இந்த வருட காலாண்டில் வீதி விபத்துக்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாகவும் அப்பணிமனை மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X