2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் 311 பேர் காசநோய் தொற்றினால் பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
யாழ். மாவட்டத்தில் 13 சிறுவர்கள் உட்பட 311 பேர் காசநோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் எஸ்.யமுனானந்தா இன்று தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

2012 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் இன்று வரையான காலப்பகுதியில் காசநோய் தொற்றுக்குள்ளாக்கப்பட்டவர்களில் 117 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 79 பேர் காசநோய் கிருமித் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் 115 பேர் கட்டிகள் மற்றும் தோலின் ஊடாக காசநோய்த் தொற்றுக்குள்ளானமை தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, கடந்த வருடம் 10 சிறுவர்கள் உட்பட 354 பேருக்கு காசநோய்த் தொற்று இனங்காணப்பட்ட போதிலும் கடந்த வருடத்தினைவிட இந்த வருடம் காசநோய்த் தொற்று குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .