2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நெடுந்தீவுக்கு ரூ.4 கோடி செலவில் புதிய படகு

Menaka Mookandi   / 2013 ஜூன் 21 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நடவடிக்கையினை மேம்படுத்த வடதாரகை போன்று புதிய படகொன்றை சேவையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய 4 கோடி ரூபா செலவில் புதிய படகொன்று கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய படகுச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து உரிய கவனங்கள் செலுத்தப்பட்டு வருவதுடன் மின்சாரம் இல்லா பகுதிக்கு விரைவில் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .