2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சங்கிலியன் சிலை 4ஆம் திகதி திறப்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 26 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் சிலை ஓகஸ்ட் மாதம்  4ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

மாநகரசபை மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் நடைபெற்ற சங்கிலியன் சிலை திறப்புவிழா தொடர்பான கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தச் சிலையினை  கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திரைநீக்கம் செய்து வைப்பார் எனவும் நான்கு மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அறிஞர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும், யாழ்.நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Pavithra Thursday, 28 July 2011 01:13 AM

    முன்னர் போல் வீரத்துடன் இருக்குமா அல்லது? ........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .