2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தென்மராட்சியில் 427 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தென்மராட்சி வலய 15 கிராம சேவையாளர் பிரிவுகளில் 427பேர், புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக கபே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மயூரன் தெரிவித்தார்.

கபே அமைப்பின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரத்திற்கான நடமாடும் சேவை நேற்று தென்மராட்சி வலய வரணி பிரதேசத்தில் நடைபெற்றது.

இதன் போது, தென்மராட்சி வலய 15 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மக்கள் அடையாள அட்டைம ற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில், சாவகச்சேரி பிரதேச செயலளர் எஸ்.சத்தியசீலன் உட்பட நிர்வாக உத்தியோகத்தார்கள், கபே அமைப்பின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .