2025 ஜூன் 21, சனிக்கிழமை

வெடிக்காத வெடிபொருட்களினால் 5 வருடங்களுக்கு அபாயம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

இன்னமும் 5 வருடங்களுக்கு வெடிக்காத வெடிபொருட்களினால் அபாயம் உள்ளதெனவும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

மிதிவெடி அகற்றல் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் மீள்குடியேற்றப்பட்ட  பகுதிகளில் வெடிக்காத வெடிபொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவ்வாறான வெடிபொருட்களின் அபாயம் இன்னும் 5 வருடங்களுக்கு காணப்படும்.

1990ஆம் ஆண்டு யுத்தத்தின்போது பயன்டுத்தப்பட்ட வெடிகுண்டு யாழ். நகரில் அண்மையில் மீட்கப்பட்டதுடன், அரியாலைப் பகுதியிலும் வெடிக்காத வெடிபொருட்கள் அண்மையில் மீட்கப்பட்டன. வன்னியிலேயே வெடிக்காத வெடிபொருட்கள் அதிகளவில் காணப்படுகின்றனவெனவும் அவர் கூறினார்.

வெடிக்காத வெடிபொருட்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனக் கூறிய அவர்,  அவ்வாறான வெடிபொருட்கள் காணப்படுமானால் அருகிலுள்ள மிதிவெடி அகற்றும் பிரிவில் தெரியப்படுத்துமாறும் அவற்றை பொதுமக்கள் கையாள வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .