2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு 5,152 பேர் தகுதி

Kogilavani   / 2011 ஜூலை 11 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, தாஸ்)
யாழ். மாவட்டத்தில் நாளை 12ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகள் அனைத்தும்  பூர்த்தியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ. கருணாநிதி தெரிவித்தார்.

இத்தேர்தலில் 5,152 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் இதேவேளை இந்த தபால் மூல வாக்களிப்புக் கடமையில் அத்தாட்சிபடுத்துனர்களாக 163 பேர் ஈடுபடுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தபால் மூல வாக்களிப்பை அமைதியாகவும் நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் யாழ்.பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X