2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மிதிவெடி அகற்றும் பணி 55 வீதம்வரை பூர்த்தி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் 55 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் பெருமளவான மிதிவெடிகள் இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன.  யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை  அகற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

ஏ - 9 பிரதான வீதியிலிருந்து 200 மீற்றருக்கு இரு மருங்கிலும் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை  அகற்றும் பணியை  மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் 55 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாகவும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .