2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 27 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்புக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 102 கிலோ  கஞ்சாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 இந்திய மீனவர்களும் 2 நெடுந்தீவு மீனவர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த 6 சந்தேக நபர்களும் நெடுந்தீவு பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இது தொடர்பான  வழக்கு கடந்த வாரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த 6 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளன.  மேலும் கஞ்சாவை இராசாயன பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிபதி  ஆர்.எஸ்.எம்.மகேந்திராஜா உத்தரவிட்டுள்ளதாகவும்  நெடுந்தீவு பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .