2025 மே 17, சனிக்கிழமை

தனது 8 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான தந்தைக்கு பிணை

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 24 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தனது எட்டு வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரொவருர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சந்தேக நபர் தனது சட்டத்தரணி மூலம் பிணை விண்ணப்பம் சமர்பித்திருந்தார். இவரின் பிணை விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி 5000 தண்டப்பணமும் 50,000 ஆயிரம் பெறுமதியான இருவர் கொண்ட ஆள்ப்பிணையில் விடுதலை செய்தார்.

குறித்த நபர் ஏற்கனவே குற்றம் ஒன்றிற்காக 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் எனவும் இவரது மனைவி மறுமணம் புரிந்துள்ளார் எனவும் கோப்பாய் பொலிஸாரின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .