2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அரைக்கும் ஆலை திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வடமாகாண சபையின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடையின் கீழ், கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட  அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் ஆகியவற்றை வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் நேற்று  வெள்ளிக்கிழமை (16) திறந்து வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வெள்ளப்பள்ளம் கிராம அபிவிருத்தி  சங்கத்தினரால் நிர்மானிக்கப்பட்ட அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X