2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அறைக்குள் வெட்டப்பட்டிருந்த கிடங்கிலிருந்து பணம், கஞ்சா மீட்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாதகல் கோணாவளை வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில், கிடங்கு வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ 305 கிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி டிக்கிரி பண்டாரா தெரிவித்தார்.

அத்துடன், வீட்டு உரிமையாளரான 24 வயதுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு புதன்கிழமை (16) மதியம் கிடைக்கபெற்ற ரகசியத் தகவலினை அடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

வீட்டின் அறையினுள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த குழியொன்றை தோண்டிய போது, 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேலும், சமையில் அறையில் இருந்த வாளி ஒன்றினுள் மிகவும் சூட்சுமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,000 மற்றும் 500 ரூபாய் தாள்களை கொண்ட 76 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X