Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குக் கிடைக்கின்ற உதவிகளை உச்சளவில் பயன்படுத்தி தொழில் முயற்சிகளை ஆர்வமாக மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்துக்கு எமது பொருளாதாரத்துக்கும் பங்காற்ற முன்வரவேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கான 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நிதி ஒதுக்கீட்டில், தெரிவு செய்யப்பட்ட 19 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கோழி வளர்ப்புக்கான உதவிகளை புதன்கிழமை (30) கையளித்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலைமையிலேயே காணப்படுகின்றது. நாளாந்தம் எமது மக்கள், வாழ்வாதாரத்துக்காக போராட வேண்டியுள்ளது. நாம் இன்று பல கிராமங்களுக்கும் நிலைமைகளை அறிவதற்காகச் செல்கையில், உண்மையில் மக்களிடத்தில் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் இருக்கின்றது. எனினும், அத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு எவ்வித முதலீட்டு மார்க்கங்களும் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதைக் காண்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை உரியவர்கள் தகுந்தவாறு பயன்படுத்தினால், அவர்களது குடும்பப் பொருளாதாரமும் எமது வடமாகாணப் பொருளாதாரமும் வளர்ச்சி காண்பதற்கு ஒத்துழைக்க முடியும். இன்று நாம் உங்களுக்கு வழங்கியது, ஓர் தொழிலுக்கான முதலீடு. இது உங்களது எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கானது. போர்காலத்தில் கூட எம்மிடம் உணவுப் பொருட்களில் ஓர் தன்னிறைவு காணப்பட்டது. எனினும் தற்போது எல்லாவற்றுக்கும் தெற்கை நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டு வருகின்றது. உள்ளூரில் பலதரப்பட்ட உற்பத்திகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். எமது ஒத்தாசைகளுடன் நீங்கள் நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025