2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

1.5 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், காட்டாஸ்பத்திரி கிராமத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியியுடன், சந்தேக நபர் ஒருவரை  மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (10) புதன்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 1.5 கிலோகிராம் நிறை கொண்ட கோரள கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனையை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X