2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'கசிப்பு காய்ச்சுவதற்காகவே கோடா வைத்திருந்தேன்' என்று கூறியவருக்கு 6 மாதகாலச் சிறை

Gavitha   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கசிப்பு காய்ச்சுவதற்காகவே கோடா மற்றும் காய்ச்சும் உபகரணங்களை உடமையில் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் கூறிய நபருக்கு 6 மாதகால கடூழியச்சிறை தண்டனையும் 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 60 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணம்; என்பவற்றை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர், கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, கோடா தன்னுடையது என்றும் கசிப்பு உற்பத்திக்காக இதனைச் வைத்திருந்ததாகவும்  நீதிமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X