Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.
மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து நீதவான் அதிகூடிய தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.
அத்துடன் மூவரையும் 50 மணித்தியாலங்கள் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்துமாறு சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது நீதவான் அபராதத்துடன் கூடிய சமுதாயம் சார்சீர் திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
42 minute ago
4 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
17 Jul 2025
17 Jul 2025