2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான கலந்துரையாடலில் மக்கள் பிரதிநிதிகளும் வேண்டும்'

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் கலந்துரையாடல், வடமாகாணத்தில் நடைபெறும் போது, அதில் அரச அதிகாரிகள் மட்டும் கலந்துகொள்ளாமல் மக்கள் பிரதிதிகளும் கலந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசாங்கத்தை கோரும் பிரேரணை, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற மாதாந்த அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இந்தப் பிரேரணையை முன்வைத்தார். பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,

'இந்த அலுவலகத்தில் கடந்த கூட்டம் தனியே அரச அதிகாரிகளுடன் நடைபெற்று, தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இனிவருங்காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்படவேண்டும்' என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறு தான் நடந்துள்ளது. இது தொடர்பில் ஐந்து மாவட்டங்களின் செயலாளர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதவேண்டும் என்று உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில்,

'நான் அரச அதிபர்களுக்கு கடிதம் எழுதவில்லை. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அத்துடன், வடமாகாணத்திலுள்ள சில அதிகாரிகள் தாங்கள் மத்திய அரசாங்கத்துக்குத்தான் கட்டுப்படுவோம், உங்களுக்கு கட்டுப்படமாட்டோம் எனக்கூறுகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். அவர் அவ்வாறு இல்லையென்றும் இது பிழையான எண்ணம் என்றும் மக்களுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும் என்;றும், அவ்வாறான அதிகாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்' எனக்கூறினார்.

உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய, இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .