2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தகாத வார்த்தையால் என்னை திட்டுகின்றனர்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

எனக்கு அலைபேசியில் அழைப்பை எடுக்கும் சிலர், பேராயர் என்றும் மதிக்காமல் என்னைத் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

பாதிரியார் என்ற மரியாதை இல்லாமல் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர். ஜனாதிபதி கூட பாதிரியார்களுக்கு மரியாதை செய்கையில் இவர்கள் இவ்வாறு ஏசுகின்றனர். இது கண்டித்தக்கது.

பாடசாலையின் பிரச்சினை பெரிதாவதற்கு வெளியாட்களின் உள்நுழைவே காரணம். இதனால், பாடசாலையில் சி.சி.டி.வி கமெராக்களை பொருத்தவுள்ளோம். இதனால், வெளியாட்களின் குழப்பங்களைத் தவிர்த்து பாடசாலையை சிறப்பாக நடத்திச் செல்ல முடியும்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தினங்களில் பாடசாலைக்கு எவ்விதத்திலும் நான் பொலிஸாரை அழைக்கவில்லை. பாடசாலைக்குப் பொலிஸார் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X