2025 ஜூன் 25, புதன்கிழமை

'நல்லாட்சியில் சமூக சமயங்களின் பங்கு' கருத்தரங்கு

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.லாபீர்

சர்வமதங்களுக்கிடையிலான சகவாழ்வு அரங்கத்தின் ஏற்பாட்டில் 'நல்லாட்சியில் சமூக சமயங்களின் பங்கு' என்னும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு, யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில், அருட்திரு பி.புனிதராசா, மௌலவி ஏ.எம்.ஏ.அசீஸ், அருட்திரு யாவீஸ் அடிகள், பாலகுமார குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

'அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கு இறைவன் இருக்கின்றான். மதத்தலைவர்கள் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கு உழைக்க வேண்டும். மனித மாண்பை அடியிலிருந்து வரவழைக்க வேண்டும். சம உரிமையை வளர்த்தல், ஏழை, பணக்கார பேதத்தை உடைத்தல், பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கல் ஆகியவற்றை சமயங்களாலும் சமயத் தலைவர்களாலும் நடைமுறைப்படுத்த முடியும'; என அருட்திரு பி.புனிதராசா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .