2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

9 மோட்டார் குண்டுகள் மீட்பு

George   / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மீசாலை பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்ட 9 மோட்டார் குண்டுகளும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வியாழக்கிழமை (28) செயலிழக்க செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைத் தோட்டத்தில் கிடங்கு வெட்டும் போது, மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டு அது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் குறித்த இடத்துக்கு பொலிஸார் சென்று பார்த்த போது 9 மோட்டார் குண்டுகள் இருந்துள்ளன. அதனையடுத்து, அதனை மீட்டு செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X