2025 ஜூலை 12, சனிக்கிழமை

70 வீதமான நிதி அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது

Kogilavani   / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு மாகாண சபையினால் விவசாய அமைச்சுக்கு 2015 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 193 மில்லியன் ரூபாயில் 70 வீதமான நிதி, அபிவிருத்தி வேலைகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'எஞ்சிய நிதிக்கான வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. எந்த நிதியையும் திரும்பிச் செல்வதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. அனைத்தையும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவோம். இதில் முறைகேடுகள் ஊழல்கள் நடப்பதற்கு எந்தவிதமான சந்தரப்பங்களும் இல்லை. காரணம் நேர்மையான, உண்மையான முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எமக்கு கிடைத்திருக்கின்றார். அவரின் தலைமையில் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .