2025 ஜூன் 28, சனிக்கிழமை

19 வயது இளைஞரை காணவில்லையென முறைப்பாடு

George   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயது இளைஞரை காணவில்லை என வியாழக்கிழமை (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு சென்று வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். எனினும், இதுவரை வீட்டிற்கு வரவில்லை என தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .