2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ரூ.100 மில்லியன் அபிவிருத்தி திட்டம் நெடுந்தீவில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் தீவுப்பகுதியில் உள்ள 3 பிரதேச சபைகளுக்கும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க 300 மில்லியன் ரூபாவினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நெடுந்தீவு பிரதேசத்த்தின் அபிவிருத்திக்கென 42 திட்டங்கள் முன்னொழியப்பட்டு 100 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் நெடுந்தீவுக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அபிவிருத்தித் திட்டங்களை அரம்பித்து வைத்ததுடன் பொது மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த நிகழ்வுகளில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம், வடபிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் உடவத்தை, யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன், பிரதேச செயலாளர் ஆ.சிறி, பிரதேச சபைத் தவிசாளர், யாழ் மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக் கட்சின் அமைப்பாளர் க.கமலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .