2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

11 வருடங்களின் பின் தனங்கிளப்பில் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 11 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஏ - 32 வீதியில் அமைந்துள்ள தனங்கிளப்பு கிராமத்தில் கடந்த 11 வருடங்களுக்கு பிறகு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

தனங்கிளப்பு கிராமத்தில் 271 குடும்பங்களைச் சேர்ந்த 850 வரையானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் இந்நிகழ்வின் போது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களையும் உலர் உணவுப் பொதிகளையும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் வழங்கி வைத்தனர்.
 
தொடர்ந்து அங்கிருந்த மக்களுடனும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்துரையாடி அவர்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அப்பகுதிக்கான மின் விநியோகத்திற்கான மின்கம்பத்தையும் நாட்டி வைத்து, படைத்தரப்பினரால் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடத்தையும் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

அந்நிகழ்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X