2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'

Kogilavani   / 2013 ஜூலை 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


'13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது' என யாழ்.இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். செட்டித் தெருவில் அமைந்துள்ள லக்சறி விருந்தினர் விடுதியில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இனவிவகாரங்களுக்கான செயலாளரும் மற்றும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளருமான சிதம்பரம் மோகனின் '13ஆவது அரசியல் யாப்பு சம்பந்தமான யாதார்த்தமும் சில உண்மைகளும நூல் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அதுமட்டுமன்றி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்த பொழுது 13 பிளஸ் பிளஸ் என கூறியுள்ளார். இப்போது இருக்கின்ற வெளிவிவகார அமைச்சரும் அதேயேதான் கூறியிருக்கின்றார்.

அந்த நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், 13வது திருத்தம் சம்பந்தமாக இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை' என்றும் அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .