2025 ஜூன் 19, வியாழக்கிழமை

15 வயதுச் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுவன்  ஒருவனைக்  காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் இன்று  தெரிவித்தனர்.

புத்தூர்  மேற்கைச் சேர்ந்த  கவிதாசன் ரிஷாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 19ஆம் திகதி வெளியே செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுவனின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .