Super User / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி கிழக்கில் மீள்குடியமர்ந்துள்ள மக்கள் கடற்றொழிலை மேற்கொள்வதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை மாமுனை, செம்பியன்பற்று, உடுத்துறை, வத்திராயன் ஆகிய கடற்பகுதிகளில் இடம்பெற்றன.
இதில் 200 கடற்றொழிலாளர்கள் இன்று காலை தமது தொழில்களை ஆரம்பித்தனர்.
இவர்கள் மாமுனையில் இருந்து ஆழியவளைவரை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றித் தமது தொழில்களில் ஈடுபடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் 551ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான மு.ஸ்ரீபதி, இ.சதீஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago