2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நாகர் கோவில், தனங்கிளப்பில் மீள்குடியேற்றம்: யாழ். அரச அதிபர்

Super User   / 2011 ஜூலை 07 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நாகர்கோவில் மற்றும் தனங்கிளப்பு பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யதற்கான அனுமதி யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிகளில் இப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாகர்கோவில் மேற்கில் 158 குடும்பங்களை சேர்ந்த 557 பேரும், நாகர்கோவில் தெற்கில் 92 குடும்பங்களை சேர்ந்த 369 பேரும், தனங்கிளப்பில் 246 குடும்பங்களை சேர்ந்த 850 பேரும் மீள்குடியேற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X